குறிப்பு

என் வலைப்பூவிற்கு லோகோ அமைத்துக் கொடுத்த எஸ்கே(S.K) அவர்களுக்கு நன்றி.

Friday, December 31, 2010

வருக.. புத்தாண்டே வருக..!

               ஒவ்வொரு புது வருடத்திலும் நமக்கு ஒரு வயது கூடுகிறது. சில பல நல்ல மற்றும் கெட்ட சம்பவங்கள் நமக்கு நடக்கிறது. பல மரங்கள் உயிரிழக்கின்றன. பஞ்ச பூதங்களும் மேலும் மாசுறுகின்றன. மக்கள் தொகையும், வாகனங்களும், குற்றங்களும், பொறாமைகளும், ஆசைகளும், ஊழல்களும் அதிகரிக்கின்றன.


             கனவு நிறைவேறியதென சிலர் மகிழ்ச்சியுறும் அதே வருடத்தில் கட்டிய கனவுக்கோட்டை தகர்ந்து போனதே என சிலர் வேதனைப் படுகின்றனர். படிப்பு முடிந்து விட்டது என சிலர் சந்தோசப் படுவதும் பொதுத்தேர்வு என சிலர் கஷ்டப்படுவதும் ஒரே வருடத்தில் தான். கொள்ளையடித்த பணத்தை காப்பாற்ற முடியாமல் ஒருவர் தடுமாறுவதும் சமையலுக்கு அத்தியாவசியப் பொருட்கள் வாங்கக் கூட காசில்லாமல் பலர் தடுமாறுவதும் ஒரே வருடத்தில் தான்.
        
            புத்தாண்டுக் கொண்டாட்டங்களும் இன்ன பிற கோலாகல விழாக்களும் நடந்த ஆண்டில் தான் பலபேர் முன்னிலையில் பிரசவித்த பெண் இறந்தாள். குடிநீருக்கே கஷ்டப்படும் அதே வருடத்தில் தான் மழை வெள்ளத்தால் பலர் இறந்தனர்.

                
              ஒவ்வொரு புது வருடமும் நமக்கு ஒரு நம்பிக்கையை கொடுக்கிறது. மேலும் மேலும் தேட வேண்டும், எதையாவது சாதிக்க வேண்டும், கனவை அடையவேண்டும், இன்ன பிற வேண்டும் என நம் எண்ணங்களுக்கு வண்ணம் கொடுக்கும்  பணி புத்தாண்டுக்கே!!

 கடந்த வருடத்தைப் போலில்லாமல் இனிவரும் வருடம் துன்பங்கள் குறைவாகவும் நன்மைகள் அதிகமாகவும் தரும் என்ற எதிர்பார்ப்புடன்  புத்தாண்டை வரவேற்போம். தை ஒன்றா இல்லை சித்திரை ஒன்றா இல்லை ஜனவரி ஒன்றா, புத்தாண்டு எதுவாகினும் நம் வாழ்க்கையை சந்தோசமாய் மாற்ற வரும் புத்தாண்டை வரவேற்போம்.

அனைவருக்கும் என் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்..

Tuesday, December 7, 2010

டாகுடர் விஜய்க்கு சில தேர்தல் டிப்ஸ்கள்

 நமது இளைய தலவலி தளபதி டாகுடர் விஜய் கூடிய விரைவில் தனிக்கட்சி தொடங்கி ஆட்சியைப் பிடிக்கும் எண்ணத்தில் இருப்பதாக செய்திகள் வருகின்றன. அதற்காக அவர் நடிக்க இருந்த 3 இடியட்ஸ் படத்தைக் கூட கைவிட்டு விட்டதாக சொல்லப்படுகிறது. எனவே அவர் கட்சி தொடங்குவதற்கும் தேர்தலில் போட்டியிடுவதற்கும் நம்மாலான சில டிப்ஸ்கள்:

தமிழ் நாட்டில் பெரும்பாலான கட்சிகளின் பெயர்கள் ”கழகம்” என முடிகின்றன. நமது டாகுடர் தான் எதையும் வித்தியாசமாய் செய்பவராச்சே, அதனால் அவருடைய கட்சியின் பெயர் "கலகம்" என முடியுமாறு வைத்துக் கொள்ளலாம். SAC முன்னேற்றக் கலகம், ஷோபா முன்னேற்றக் கலகம், டாகுடர் இளைய தலைவலி திராவிட முற்போக்குக் கலகம், சங்கீதா முற்போக்கு கலகம், இன்னும் இதுபோன்ற பெயர்கள் நிறைய நம்ம கிட்டே இருக்கு.

கட்சியின்  சின்னமாக கரப்பான்பூச்சி ஸ்ப்ரே, குருவி, வில்லு, சுறா போன்றவற்றில் ஏதாவது ஒன்றை வைத்துக்கொள்ளலாம்.

யாருடன் கூட்டணி வைப்பது என முடிவு செய்துவிட்டார் நம்ம டாகுடர் விஜய். அவர் ஒருமுறை முடிவு செஞ்சுட்டா அவர் பேச்சை அவரே கேட்க மாட்டாராம். இருந்தாலும், ல.தி.மு.க விஜய டிஆர், சுப்பிரமணியன் சாமி, கார்த்திக், சரத்குமார் போன்ற பெரிய(?) தலைவர்களுடன் கூட்டணி வைத்தால் எப்படியும் இருநூறு இடங்களில் போட்டியிடலாம்.

இப்போது அரசியலுக்கு வருபவர்கள் எல்லோரும் முதலமைச்சர் ஆசையுடன்தான் வருகின்றனர் என நமது தலைவர்(?) முதலமைச்சர் வேதனைப்படுகிறார். எனவே நமது டாகுடர் வருங்கால பிரதமர் அல்லது ஜனாதிபதி அல்லது அமெரிக்கா அதிபர் போன்ற ஆசையுடன் அரசியலுக்கு வருவதாக அறிவிக்கலாம். இதனால் தலைவரும் சந்தோசப்படுவார். (அவரது வாரிசுகளும் டாகுடர் படங்களை வாங்கி வெளியிட்டு தமிழ்நாட்டு மக்களை கொல்வார்கள்.)

இளைஞர் காங்கிரசில் சேர தகுதியில்லை என்று நம்ம டாகுடரை சொன்ன இத்தாலியின் விடிவெள்ளி ராகுலை நமது டாகுடர் கட்சியில் முதியோர் அணியில் கூட சேர அவருக்கு தகுதியில்லை என கலாய்க்கலாம். (அப்படியாவது டாகுடர் இளைஞரா காட்டலாம்)

சென்னையில் இருக்கும் ரவுடிகளை அழிக்கும் பணியில் அதிக நாள் இருக்கும் நமது டாகுடர் விஜய், ஆட்சிக்கு வந்தால் சென்னையில் இருக்கும்
ரவுடிகளை மட்டுமல்ல இந்தியாவில் இருக்கும் அனைத்து ரவுடிகளையும் அழிப்பேன் என கேப்டனுக்கு சவால் விடலாம். (கேப்டன் தீவிரவாதிகளை பிடிக்க பாகிஸ்தான் வரைக்கும் போறாரு. நம்ம டாகுடர் ரவுடிகளைப் பிடிக்க பீகார் வரைக்கும் கூட போகமாட்டாரா என்ன?)


"சைலன்ஸ்" இந்த சொல்லை வருங்காலத்தில் பாடத்திட்டத்தில் வைப்பேன் என அறிக்கை விடலாம். இதனால் குழந்தைகள் ஓட்டு கிடைக்கும். (ஆனா, அவங்க ஓட்டுப் போட முடியாதே?)

பனிரெண்டாம் வகுப்புத் தேர்வை பலமுறை எழுதி பெயிலாகிவிட்டு பிள்ளையாரிடம் சண்டை போடும் மாணவர்களுக்கு போலிஸ் வேலை தருவதாக சொல்லலாம். (டாகுடர் படத்தைப் பார்த்தவன் எப்படி பாசாவான்?)

சிங்கு போல வேஷமிட்டு கடத்தல் செய்யும் ரசிகர்களுக்கு கடற்படையில் வேலை வாங்கி தருவதாக சொல்லலாம். (அப்பவாவது வடக்கே நம்ம டாகுடரை மதிப்பாங்களா?)

ரேசன் கடைகளில் அரிசி, பருப்புடன் டாகுடரு பட DVDகளை இலவசமாத் தருவதாக உறுதியளிக்கலாம். (அப்புறம் எவனும் ரேஷன் கடைக்கே வரமாட்டான்ல)

தேர்தல் சமயத்தில் சன் டிவி, கே டிவி போன்ற டிவிகளில் நமது டாகுடர் படங்களை போடக்கூடாது என கோர்ட்டில் மனு செய்யலாம். (அப்படி போட்டா அப்புறம் எவனும் ஓட்டுப் போட மாட்டான்)

ஓட்டுப் போடவில்லை என்றால் இந்த மாதிரி (காவலன்) ட்ரைலர் வெளியிட்டு அனைவரையும் தமிழ்நாட்டை விட்டே துரத்துவேன் என சவால் விடலாம். (அவர் படத்தைப் பார்த்தவர்களுக்கு வாய்க்கரிசி அவரே இலவசமாக கொடுக்கிறார்)


கடைசியாய்

இனிமேல் "என் வாழ்க்கை முழுவதும் படங்களில் நடிக்க மாட்டேன்" என டாகுடர் இளைய தலைவலி தளபதி விஜய் அறிவிக்கலாம்.

                

Saturday, November 27, 2010

எனது டைரி குறிப்புகள்

நாள்  : 31st July 2005

                நான்  தனியாகத்தான் உள்ளேன் உருவத்தால். ஆனால் உள்ளத்தால் எந்நேரமும் உன்னுடனே தான் உள்ளேன். என்ன செய்ய? பார்த்துப் பல நாட்கள் ஆகிவிட்டது. நாட்கள் வாரங்களாய், வாரங்கள் மாதங்களாய் ஆகி இப்போது வருடங்களாய் உருண்டோடிவிட்டது.


                     பார்க்கவே நேரமில்லை உனக்கு. பின் எப்படி என்னை நினைத்துக் கொண்டிருப்பாய்?  உனக்காய் யுகம்யுகமாய்க் காத்திருப்பேன், உன்காலடி நிழலையும் தாங்குவேன் என பொய் வார்த்தைகள் நான் சொல்லவில்லை. நான் உன் நினைவிலேயே இருந்து அழிந்து போகிறேன் என்றுதான் சொல்கிறேன்.

                    மாதத்தில் ஒரு நாளாவது நீ என்னைப் பற்றி நினைப்பாய் என எண்ணுகிறேன். அன்றாடம் வேறு பெண்களைப் பார்க்கும் போது  எனக்கு அவர்கள் முகம் மறந்து உன் முகமே அதில் தெரிகிறது.
 
                      " னக்கே பயமாய் உள்ளது. எங்கே நான் அவர்களை நீ என நினைத்துப் பேசிவிடுவேனோ என்று ?" 

                         ன்னை நினைப்பாய் தானே??

நாள் : 19th September 2007

                      ந்த இரண்டு வருடங்களில் அனைத்தும் மாறிவிட்டது. அன்று பார்த்துப் பேசி பல வருடங்களாகி விட்டது என்று எழுதியிருந்தேன். ஆனால் இன்று தினமும் பேசுகிறேன் - காதலாய் அல்ல வெறும் நட்பு மட்டும் தான்.

                    

                              ன் காதல் நட்பாய் மாறியதா இல்லை அவள் நட்பு 'நட்பாய்' தொடர்கிறதா என என்னால் அறியமுடியவில்லை.  அவளிடமும் காதல் இருந்தது என்று  நினைத்திருந்தேன்.  நான் ஏன் இப்படி மாறினேன் என்று எனக்கே தெரியவில்லை. என் கையெழுத்திலிருந்து செயல்கள் வரை அனைத்தும் மாறிவிட்டது. 

                          தினமும் பேசியதால் தான் அவளைப் பற்றி புரிந்து கொள்ள முடிந்தது. அதனால் தான் நான் நண்பனாய் மட்டும் இருக்க விரும்பினேன், விரும்புகிறேன். 
 
                          னால் அவளுடைய மனது என்ன நினைக்கிறது என்று மட்டும் என்னால் அறியமுடியவில்லை. இருந்தும் இனி நான் நண்பனாய் மட்டும் தொடர்வேன் என்று உறுதியாய் நம்புகிறேன்.

டிஸ்கி: இது என்னோட சொந்த டைரிக் குறிப்பு
         

Wednesday, November 17, 2010

நான் ரசித்த ரஜினி படங்கள் - தொடர் பதிவு

              என்னை இந்த தொடர் பதிவு எழுத அழைத்த பன்னிகுட்டி ராம்சாமி அவர்களுக்கு நன்றிகள் பல. சிறிய வயதில் சட்டையில் ரஜினி படம் குத்திக்கொண்டு பள்ளி செல்லும் அளவுக்கு நான் அவரின் தீவிர ரசிகன். என்னுடைய பள்ளி காலங்களில் ரஜினி படத்திற்காக அப்போது இருந்த பஞ்சாயத்து டிவி முன்னால் மாலையில் போடும் படத்திற்காக மதியத்திலிருந்தே தவம் கிடப்போம். ஆனாலும் முதல் நாள் முதல் ஷோ பார்த்தது இல்லை இதுவரையிலும்.

               ரஜினி நூற்றைம்பது படத்திற்கு மேல் நடித்திருந்தாலும் நான் பார்த்தது என்னவோ ஐம்பது படங்கள் கூட இருக்காது. நான் ரஜினியை ஒரு கடவுளாகவோ மாஸ் ஹீரோவாகவோ  பார்க்க மாட்டேன். என்னைப் பொறுத்தவரை ரஜினி என்பவர் ஒரு திறமையான நடிகர். உண்மையாகவே இயக்குனர்கள் அவரை சரியாகப் பயன்படுத்தவில்லை.


10. பில்லா
              இது அவருக்கு ஆக்சன், நடிப்பு மற்றும் காமெடி என பல்முகங்களைக்  காட்ட கிடைத்த படம். அடிபட்டு காரில் இருக்கும் பொழுதும் டி எஸ் பியை மிரட்டுவதும் வெத்தலைய போட்டேண்டி என அப்பாவியாய் ஆடும் காட்சியும் எனக்குப் பிடித்தவை.
 

9. தர்மத்தின் தலைவன் 
           இது நான் பலமுறை பார்த்த படம். வேட்டி இல்லாமல் ரோட்டில் நடப்பதும் அது தெரிந்து ஓடி ஒளிவதும் சுஹாசினியிடம் வெட்கப்பட்டுக் கொண்டே பேசுவதும் பின் பாதியில் ஆக்சனில் கலக்குவதும் இப்படத்தில் சிறப்பான காட்சிகள்.

8. தில்லு முல்லு
          ரஜினியின் காமெடிக்கென்றே பலமுறை நான் பார்த்த படம். இன்டர்வியூ காட்சியும், கமல் வரும் காட்சியும் மீசையை வைத்து ஒருத்தன் என்னை ஏமாத்திட்டான் என தேங்காய் சீனிவாசன் மீசையை எடுப்பதும் என படம் முழுக்க காமெடிதான்.

7. ராஜாதி ராஜா 
          நான் பார்த்த முதல் ரஜினி படம். சின்னராசு வாக வரும் ரஜினி எனக்கு ரொம்ப பிடிக்கும். ஆனந்தராஜிடம் பழத்தாரை கொடுத்து அப்பாவியாய் நிற்பதும் தாயத்து கட்டியவுடன் அதே ஆனந்தராஜை கூப்பிட்டு அடிப்பதும் என வெளுத்துக் கட்டியிருப்பார்.

6. நான் அடிமை இல்லை 
           இதுவும் நான் மிகவும் ரசித்துப் பார்த்த படம். ரஜினி - ஸ்ரீதேவி  காதல் காட்சிகளும், ரஜினி குழந்தையுடன் இருக்கும் காட்சிகளும் என இந்த படத்தில் செண்டிமெண்ட் காட்சிகளே அதிகம். ரு ஜீவன் தான் பாடலில் வரும் "கீழ்வர்க்கம் மேல்வர்க்கம் இணையாத இருகோடுகள்" நான் மிகவும் ரசித்த வரிகள். 



5. புவனா ஒரு கேள்விக்குறி  
            ரஜினி  ஒரு திறமையான நடிகர் என நிருபித்த படம். இதில் ஒரு நடிகனாக ரஜினி எனக்குப் பிடிக்கும்.

4. ஆறிலிருந்து அறுபது வரை
            இதுவும்  ரஜினியின் சிறப்பான நடிப்புக்கு ஒரு சான்று. படம்முழுவதும் ஒரு சோகம் இழையோடும் அவரது நடிப்பில். "கண்மணியே காதல்" என்பது இந்த பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்.

3. தளபதி
            எனது  பள்ளி நாட்களில் வந்த படம். ரஜினி ரசிகர்களின் ஆராவாரத்துக் கிடையே நான் பார்த்தபடம். ரஜினி-மணிரத்னம் கூட்டணியில் பயங்கர ஹிட்டான படம். இதில் ரஜினி ஆக்சன், செண்டிமெண்ட் என கலந்துகட்டியிருப்பார்.

2. எஜமான்
           ரஜினியின்  திறமையை நிரூபித்த மாற்றுமொரு படம். பட்டாம்பூச்சி பிடிப்பது, ஆல விழுதுகளை அனுப்புவது, தூக்குச்சட்டிகளை  காலி செய்வது என நகைச்சுவை, செண்டிமெண்ட் என்று கலக்கியிருப்பார்.

1. பாட்ஷா
          ரஜினியே  சொன்னது போல அவரது ஆல் டைம் ஹிட்சில் முதலில் உள்ள படம். நான் ஒரு தடவ சொன்னா, உண்மையை சொன்னேன் இந்த இரண்டு டயலாக்குகளும் மறக்க முடியாதவை. இதிலும் ஆக்சன், காமெடி, செண்டிமெண்ட் என கலக்கியிருப்பார்.



           இவை தவிர எனக்கு பிடித்த படங்கள்  மனிதன், மிஸ்டர் பாரத், மன்னன், சிவாஜி, அண்ணாமலை, முள்ளும் மலரும் (இந்த படம் நான் பார்க்காததால் லிஸ்டில் சேர்க்கவில்லை), ராஜா சின்ன ரோஜா, குரு சிஷ்யன், மாப்பிள்ளை, படிக்காதவன், சந்திரமுகி, முத்து, மாவீரன், படையப்பா  என ஒரு பெரிய லிஸ்டே உண்டு.

எனக்கு பிடித்த ரஜினி பாடல்கள்:
  • கண்மணியே காதல் என்பது - ஆறிலிருந்து அறுபது வரை
  • எங்கேயும் எப்போதும் - நினைத்தாலே இனிக்கும்
  • ஒரு தங்க ரதத்தில் பொன் மஞ்சள் நிலவு - தர்ம யுத்தம்
  • அம்மா என்றழைக்காத - மன்னன்
  • வெற்றி நிச்சயம் - அண்ணாமலை
  • ஒரு ஜீவன் தான் - நான் அடிமை இல்லை
  • வெள்ளைப்புறா ஒன்று - புதுக் கவிதை
  • காதலின் தீபம் ஒன்று - தம்பிக்கு எந்த ஊரு
  • தாழம் பூவே வாசம் - கை கொடுக்கும் கை*
  • விடுகதையா இந்த- முத்து
     (கை கொடுக்கும் கை* - இந்த படத்தின் பெயர் சரியா எனத் தெரியவில்லை)

        
    இந்த தொடர் பதிவை தொடர நான் அழைப்பது:
        
    பிலாசபி பிரபாகரன் (ஏற்கனவே வாக்குக் கொடுத்தபடி நான் அழைக்கிறேன். இம்சை அரசன் பாபுவும் அழைத்திருக்கிறார்),
    வம்ப வெலைக்கு வாங்குவோம்ல மணிவண்ணன், 
    ரஹீம் கஸாலி

    பிகு: எனக்கு படங்கள் தந்து உதவிய கூகிள் இமேசஸ்க்கு நன்றி.

           
           

    Monday, November 15, 2010

    திருப்பூர் பனியனும் ஈரோடு மஞ்சள் மார்க்கெட்டும்

                தீபாவளிக்கு ஊருக்கு செல்வதற்காக அந்த புதன் கிழமையன்று அவசர அவசரமாய் அலுவலகத்தில் இருந்து கிளம்பிக்  கொண்டிருந்தேன். அப்போது எதிரே வந்தான் என்னோடு பணியாற்றும் நண்பன்.

                 "மச்சி ஒரு வாரம் லீவ் போட்டுட்டு ஊருக்கு போறே, எனக்காக ஒரு ஹெல்ப் பண்ண முடியுமா?" என்றான். "கண்டிப்பா பன்றேன் மச்சி" என்றேன் அவனிடம் வில்லங்கத்தை வாங்குது தெரியாமல். "உங்க ஊருல இருந்து திருப்பூர் பக்கம் தானே, அப்படியே எனக்கு ஒரு நாலு செட் T - ஷர்ட்  எடுத்துட்டு வந்துடு" என்றான். அவன் கிருஷ்ணகிரி பக்கம் அதனால் திருப்பூர் என்றாலே T - ஷர்ட் என நினைத்து விட்டான் போலும்.



                        மச்சி திருப்பூர்ல நல்ல T - ஷர்ட் எல்லாம் கிடைக்காதுடா, நல்ல T - ஷர்ட் எல்லாம் எக்ஸ்போர்ட் பண்ணிடுவாங்க, எப்படி ஊட்டில வெள்ளை உருளைக் கிழங்குகளை எக்ஸ்போர்ட் பண்ணிட்டு நமக்கு மோசமானதை கொடுக்கிறார்களோ அதுபோல என்று  கம்யூனிசம் பேசினேன் அவனிடம். "வாங்கி வர காசில்லனு சொல்லு" என்று முறைத்தபடி சென்றான். "திருப்பூர் போனா கண்டிப்பா வாங்கிட்டு வரேன்" என்று அவனிடம் சொல்லிவிட்டு வெளியே வந்தேன்.

                      எதிரே இன்னொரு நண்பன் வந்தான். இவன் சென்னையில் செட்டில் ஆனவன். "மச்சி  தீபாவளிய நல்லா என்ஜாய் பண்ணிட்டு வரும் போது வீட்டுலே இருந்து ரெண்டு கிலோ மஞ்சள் கொண்டு வாடா" என்றான். T - ஷர்ட் வாங்குவதற்கு இது எவ்வளவோ பரவாயில்லை என நினைத்துக் கொண்டேன் மஞ்சளின் மகிமை தெரியாமல். அடித்து பிடித்து சென்ட்ரல் சென்று கோச் தேடி ஏறி உட்காரவும் ட்ரைன் கிளம்பவும் சரியாக இருந்தது.

                     அது திருவனந்தபுரம் மெயில். இந்த ட்ரைன் தமிழர்களுக்காக இயக்கப் படுவதாக தெரியவில்லை. ஏனென்றால் சேலம், ஈரோடுக்கு அடுத்து பாலக்காட்டில் தான் நிற்குமாம். திருப்பூர், கோயம்புத்தூர் ஸ்டேஷன்களில் நிற்காதாம். நள்ளிரவு 1 .30 மணிக்கு ஈரோட்டில் இறங்கி 2 .30 க்கு வீடு வந்தோம் நானும் எனது தம்பியும்.

                   மறுநாள் காலையில் நானும் தம்பியும் அப்பா, அம்மாவுடன்  கூடத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். திருப்பூர் பனியன் கம்பனிகளின் வரவால் தோட்ட வேலை செய்ய ஆட்கள் கிடைப்பதில்லை என சொன்னார்கள். மேலும் அரசின் நூறு நாள் வேலை வாய்ப்புத் திட்டத்தால் இருந்த மிச்ச ஆட்களும் அங்கு சென்று விடுவதால் விவசாயமே செய்ய முடியவில்லை என்றார்கள். "தோட்டத்துக்கு வந்தால் வேலை செய்யணும் ஆனா நூறு  நாள் வேலைக்கு  போனால் வேலை செய்யத் தேவை இல்லை கமிசன் போக தொண்ணூறு ரூபாய் கிடைக்கும் அதனால யாரும் வர்றதில்லை" என்றார் அப்பா.


                   திருப்பூர் என்றதும் நண்பன் சொன்ன T - ஷர்ட் ஞாபகம் வந்தது. நண்பன் கேட்டதை அம்மாவிடம் சொன்னேன். "தீபாவளி சமயம் என்பதால் கூட்டம் அதிகமாக இருக்கும், தீபாவளி முடிஞ்சு போய் எடுத்துக்கோ" என்றார் அம்மா. "இன்னொரு நண்பனுக்கு மஞ்சள் ரெண்டு கிலோ வேணும் அதையும் எடுத்து வைங்க" என்றேன். "மஞ்சள் ஒரு கிலோ 150 - 200 ரூபாய்க்கு போகுது, ஒரு சட்டை (குவிண்டால்) மஞ்சள் பதினஞ்சாயிரம் தெரியுமா?" என்றார் அப்பா. "பதினஞ்சாயிரமா??" என கோரஸாக கேட்டோம் நானும் தம்பியும். எனக்கு தெரிந்து எட்டாயிரம் வரை விற்றது ஞாபகம் இருக்கிறது. ஒரு ஆறு ஏழு மாசமாகவே மஞ்சள் பத்தாயிரத்திற்கு மேல விற்கிறது  என்று சொன்னார்கள்.

                   "ஆளும் கெடைக்கிறது இல்ல, நீங்க ரெண்டு பேரும் இதுவரைக்கும் வீட்டுக்கு  கொடுத்த பணத்துல ஒரு ஜோடி காளை கூட வாங்க முடியல. அதனால அடுத்த வருஷம் இன்னும் ரெண்டு ஏக்கர் சேர்த்து மஞ்சள் போடுறேன். ரெண்டு பேரும் அதைய பார்த்துக்கங்க, அதுவே போதும்" என்றார் அப்பா.
                    

    Tuesday, November 2, 2010

    தீப ஒளி திருநாள் வாழ்த்துக்கள்!!

    'தங்கத் தாய்',

    'இத்தாலி கண்ட இதய தெய்வம்',


    அன்னை சோனியா காந்தியின்
     
    நல்லாட்சியில்

    மன்னிக்கவும் நல்லாசியுடனும் 

    தானைத் தலைவர்,

    எங்கள் சிங்கம்  கொலம்பியாவின் விடிவெள்ளி

     இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் 

    வருங்கால பிரதம மந்திரி ராகுல் காந்தியின் உதவியுடனும்

    நடக்கும் முன்னாள் பொருளாதார மேதை 

    மன்மோகன் சிங்கின் ஆட்சியில், 
     
    பசியும் பிணியும் நீங்கி அனைவரும்

     
    கோடீஸ்வரர்களாகவும் லட்சாதிபதிகளாகவும் உள்ள இந்தியாவில், 

     
    செம்மொழிகண்ட எங்கள் தலைவன் 

     
    எங்கள் வாழும் தமிழ் அவரின் நல்லாட்சியாலும்


     
     
    நாளைய உதய சூரியன் எங்கள் தளபதியின் சீரிய முயற்சியாலும்
     
     அண்ணனின் அயராத உழைப்பாலும்

     
    சிறப்புடன் வாழும் அனைத்து தமிழர்களுக்கும்(??)

     
     எனது இனிய தீப ஒளி திருநாள் வாழ்த்துக்கள்!!!





     

    Thursday, October 28, 2010

    தீபாவளியும் புத்தாடைகளும்

                        தீபாவளி நெருங்கிவிட்டது. புதிய உடைகளும் பட்டாசும் இனிப்புவகைகளும் இனி கடைகளெங்கும் வியாபித்திருக்கும். வண்ணவண்ண ஆடைகள் ரங்கநாதன் தெருவெங்கும் நிறைந்திருக்கும்.  தென்னிந்திய, வட இந்திய, மேற்கத்திய ஆடைகள் என  பலதரப்பட்ட ஆடைகள் கிடைக்கும். மனிதன் ஆடைகளால் நாகரிகம் அடைந்தானா அல்லது நாகரிகத்தால் ஆடைகளை அணிந்தானா என்று தெரியவில்லை.


                         ஆடைகளுக்கும் நாகரிகத்துக்கும் நெருங்கிய தொடர்புண்டு. ஒவ்வொரு நாகரிகமும் தனக்கென தனிப்பட்ட பழக்கவழக்கங்கள், மொழி, கலை, கலாச்சாரம் இவற்றுடன் ஆடைகளையும் கொண்டுள்ளது. ஆடைகள் அந்த நாகரிகத்தின் ஒரு அடையாளமாகவும் கருதலாம். காலங்கள் மாறும்போது ஆடைகளும் அவற்றின் தேவைகளும் மாறுகின்றன. தமிழ்நாட்டில் ஒரு காலத்தில் தலைப்பாகை அத்தியாவசியமாய் இருந்தது. ஆனால் இன்று தலைப்பாகை என்றால் என்னவென்றே அறியாத தலைமுறையும் உள்ளது.

                             என்னுடைய பள்ளிக்காலம் கிராமத்திலேயே கழிந்தது. அதுவரை விதவிதமான ஆடைகளை நான் தொலைக்காட்சியில் கண்டதோடு சரி. ஆண்களுக்கு வேட்டி, சட்டை, பான்ட்; பெண்களுக்கு சேலை, தாவணி, பாவாடை அதிக பட்சமாய் சுரிதார். கிராமத்தில் அணிந்திருக்கும் ஆடையால் ஒருவன் மதிப்பிடப் படுவதில்லை. ஆனால் நகரத்தில் ஆடைகள் தான் ஒரு மனிதனின் அந்தஸ்தை நிர்ணயிக்கின்றன. ஒருவன் எவ்வளவு தான் பணம் படைத்தவனாக இருந்தாலும் கிழிந்த ஆடை அணிந்திருந்தால் அவனுடைய வீட்டிற்குள் கூட போக முடியாது.


                              சென்ற வாரத்தில் ஒரு நாள் நண்பர் ஒருவர் வீட்டிற்க்கு நான் சென்ற போது அவர் அப்போதுதான் தீபாவளிக்காக வாங்கி வந்த ஆடைகளை எடுத்து அடுக்கிக் கொண்டிருந்தார். மொத்தமாக இருபது ஆடைகள்.  "எதற்காக இவ்வளவு  ஆடைகள்? உங்களுக்கு மட்டுமா? இல்லை உறவினர்களுக்கும் சேர்த்து எடுத்து விட்டீர்களா?" என்று கேட்டேன். "இவை அனைத்தும் எனக்கு மட்டுமே!" என்றார்.

     
                                "ஏன் இவ்வளவு ஆடைகள் எடுத்து உள்ளீர்கள்?" எனக்கேட்டதற்கு அவர் "இது எனது சிறு வயது ஆசை. நான் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன். நான் சிறுவனாக இருக்கும் போது எனது நண்பர்களெல்லாம் தீபாவளிக்காக விதவிதமாக ஆடை உடுத்துவார்கள். எனக்கு தீபாவளிக்கு பலகாரமே கிடைக்காது. அப்படி இருந்தும் ஒரு முறை புத்தாடை கேட்டதற்கு விழுந்த அடியில் தீபாவளிக்கு பட்டாசே வெடிக்க முடியாமல் போய்விட்டது. அப்போது கிடைக்காத ஆடைகளுக்காக இப்போது நான் ஒவ்வொரு பண்டிகைக்கும் குறைந்தபட்சம் 10 ஆடைகளாவது எடுக்கிறேன்." என்றார்.

                                இளம் வயதில் நிராகரிக்கப்பட்ட ஏக்கம் இவருக்கு சுயமாகச்  சம்பாதிக்கும் போது கிடைத்தது. ஆனால் இது அனைவருக்கும் வாய்ப்பதில்லை. இன்றும் கிராமத்திலோ அல்லது நகரத்திலோ தீபாவளிக்காக மட்டுமல்ல மற்ற நாட்களிலும் புத்தாடைகளுக்காக ஏங்கும் எத்தனையோ குழந்தைகளை நீங்கள் காணலாம்.

     
                                           இன்று எங்கு பார்த்தாலும் ஆடைகளை வாங்கச் சொல்லி ஒரே விளம்பரம்தான். தொலைக்காட்சி, வானொலி, போகும் வழியெங்கும் சுவரில், ப்ளெக்ஸ் பேனரில், பேருந்தின் பின்னால் என எங்கும் விளம்பரமயம். அந்த துணிக்கடைகளில் ஆடைகள் வாங்காவிட்டால் நீங்கள் ஏதோ ஒரு குற்றம் செய்தது போல் மாயை உருவாக்கிவிட்டார்கள். அதுவும் குழந்தைகளை ஆடவிட்டு இளம் நெஞ்சுக்குள் அவர்களின் வியாபாரத்தை நஞ்சாய் விதைக்கிறார்கள்.

                           பள்ளி செல்லும் பிள்ளைகள் தீபாவளிக்கு மறுநாள் புத்தாடை அணிந்து வரலாம் என சொல்லுமளவிற்கு இவர்கள் மாற்றிவிட்டார்கள். தீபாவளி கொண்டாடாதவர்களானாலும் அவர்கள் குழந்தை பள்ளி செல்லுமென்றால் அவர்களும் புத்தாடை எடுத்துத் தரவேண்டும் என்றாகிவிட்டது.

                 சமீபத்தில் ஒரு டீ கடையில் நின்று டீ குடித்துக் கொண்டிருந்தேன். அங்கு வேலை செய்யும் சிறுவன் சுவரில் தென்பட்ட ஒரு துணிக்கடையின் விளம்பரத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். நான் அவனிடம், "ஏன் அதையே பார்க்கிறாய்?" என்று கேட்டேன். அதற்கு அவன் "அண்ணா அந்த பான்ட் என்ன விலை இருக்கும்?" என்று ஒரு கார்கோ பான்ட்டைக் காட்டினான். நான் "ஒரு 500 ரூபாய் இருக்கும், எதற்கு கேட்கிறாய்?" என்றேன். "எனக்கு தீபாவளி போனஸ் கிடைக்கும். போனஸ் வந்தவுடனே அந்த கடைக்கு போய் நான் அதே பான்ட்டை வாங்கப் போறேன்" என்றான். அப்போது அவன் கண்ணில் தெரிந்தது ஆர்வமா, ஏக்கமா, நம்பிக்கையா என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.
                       

    Wednesday, October 20, 2010

    செல்போன் செயல்படாமல் போனால்?

     இன்று செல்போன் என்பது நமது வாழ்வின் ஒரு அங்கமாகி விட்டது. செல்போன் இல்லாமல் ஒரு சிலரால் சிறு துரும்பை கூட அசைக்க முடியாது. இன்னும் சிலருக்கு அது பதினோராவது விரல். இவர்களுக்கு எந்நேரமும் செல்போன் வேண்டும் குளிக்கும் போது கூட. திடீரென செல்போன்கள் அனைத்தும் செயல்படாமல் போனால் என்ன நடக்கும்?.


    சிலருக்கு எஸ்எம்எஸ் டோன் அல்லது கால் ரிங்டோன் கேட்காமல் இருப்பது சிறிது நாட்களுக்கு தூக்கம் வராமல் போகலாம்.

    சிலர் செல்போனை அலாரமாகவும் நேரம் பார்க்கவும் பயன்படுத்துகிறார்கள். அவர்கள் ஒரு டைம்பீஸையோ அல்லது கைக்கடிகாரத்தையோ தேட வேண்டி இருக்கும்.

    அவசர அழைப்புகளுக்கு காயின் பாக்ஸ் தேடி ஓட வேண்டி இருக்கும்.

    மருத்துவமனை, பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன், தியேட்டர்  போன்ற இடங்களில் ஹலோ, !@#$%^ போன்ற வாக்கியங்களையோ, காதடைக்கும் செல்போன் ரிங்டோன்களையோ கேட்க முடியாது.

    பஸ்சிலோ அல்லது ட்ரெயின்யிலோ நன்றாக தூங்கிக்கொண்டிக்கும்போது "என் உச்சி மண்டையில" அப்படீன்னு பக்கத்துக்கு சீட்ல இருந்து சத்தம் வராது.

    வீட்டில் இரவிலோ அல்லது பகலிலோ தூங்கிக்கொண்டிக்கும்போது எழுப்பி கிரெடிட் கார்டோ அல்லது கடனோ வாங்கச் சொல்லமாட்டார்கள்.

    உங்களுக்கு இந்த பாடல் பிடித்திருந்தால் ஒன்றை அழுத்தவும் என்று பதிவு செய்யப்பட பெண்குரல் தொந்தரவு செய்யாது.


    தொப்பையை குறைக்க, இன்சூரன்ஸ், நிலம், வீடு போன்றவற்றை வாங்கச் சொல்லும் எஸ்எம்எஸ் வராது.

    காதலி/காதலன் - தொடர்ந்து பேசாததால் அவர்களுக்கிடையேயான சண்டைகள் குறையும்.

    "ஏங்க அப்படியே வரும்போது மார்க்கெட் போய் காய்கறி வாங்கி வாங்க" போன்ற மனைவிகள் தொந்தரவுகள் இருக்காது.

    "நான் இப்ப கஸ்டமர் கூட ஒரு மீட்டிங்கல இருக்கேன்" என டாஸ்மாக்ல இருந்து பொய் சொல்லத் தேவையில்லை.

    ட்ராபிக்ல கஷ்டப்பட்டு வண்டி ஓட்டிக் கொண்டிருக்கும்போது "ஹலோ கூடுவாஞ்சேரி கோவிந்தசாமி இருக்காரா?" அப்படின்னு முகம் தெரியாத யாரோ கஷ்டபடுத்த மாட்டார்கள்.

    "ம்.. அப்புறம்... ம்.. அப்புறம்..." இப்படி ரூமேட்ஸ் யாரும் நைட்ல உளற மாட்டார்கள்.

    கடன் வாங்கியவர்கள் "நான் இப்ப கன்னியாகுமரில இருக்கேன்" என பொய் சொல்லத் தேவையில்லை.

    செல்போன் இல்லாததால் வாகன விபத்துக்கள் பெருமளவு குறையும். 

    "மச்சான் மாசக் கடைசி ஆயிடுச்சு, ஒரு ரெண்டாயிர ரூபா கொடுடா" இப்படி நண்பர்கள் தொல்லை இருக்காது ஏனென்றால் மொபைல் பில் அப்படியே மிச்சம் ஆகும்.

    ஐபாட், மியூசிக் பிளேயர் போன்றவை அதிகம் விற்பனை ஆகும்.

    இதற்க்கு மேலும் பயன்கள் இருக்கும். உங்களுக்கு தெரிந்த பயன்களை கமெண்ட்ஸில் போடவும்.

    Friday, October 8, 2010

    திரும்பவும் Dr விஜய்!!


    (Disclaimer:  இது எனக்கு வந்த ஒரு ஆங்கில மடலின் தமிழாக்கம். இதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.)
      
    P.S. சிரிப்பு கண்டிப்பாக தடை செய்யப்பட்டுள்ளது.

    டாகுடரு விஜய் திரும்பவும் வந்துவிட்டார்!
    ஒன்டிப்புலியாக!!

     

     மிகவும் அழகாக??

     சும்மா கும்முன்னு(?)..

    அய்யய்யோ ...!!!


    யம்மா??!!!


     அம்மாடியோ!!!???


     கடவுளே காப்பாத்துப்பா....


     உலக சினிமா வரலாற்றிலேயே முதன்முறையாக பாடிகார்ட் கெட்டப்..


     டெர்ரரான பாடிகார்ட்??



    காமெடியான பாடிகார்ட்(?)!!




    இந்த படத்தோட முதல் காட்சியில் வானத்த பொளந்துட்டு வர்றாரு நம்ம டாகுடரு விஜய்!!??


    எப்பவும் போல மக்களின் நண்பனாய் ஒரு பஞ்ச் டயலாக் (ஹார்ட் ப்ளாக் பஸ்ட்டர் படம் சுறா வில் உள்ளது போல்)

    "பாசத்துல 10  நாய்க்கு சமம் வீரத்துல 
    100  விஜயகாந்துக்கு சமம் "

    ஆனா இந்த படத்துல பஞ்ச் டயலாக் 30  நிமிடம் இருக்கு.


    தமிழ்நாட்டின் தலை எழுத்து?

    Sunday, October 3, 2010

    என்னை பற்றி!!!

    வர்ற 2011 சட்டமன்ற தேர்தல்ல, பல்லடம் தொகுதியில சுயேட்சையா நிக்கிறேன்!! அதுக்கு உங்க எல்லோருடைய ஆதரவும் எனக்கு வேணும்!!