குறிப்பு

என் வலைப்பூவிற்கு லோகோ அமைத்துக் கொடுத்த எஸ்கே(S.K) அவர்களுக்கு நன்றி.

Thursday, September 29, 2011

என் சொந்த காப்பி பேஸ்ட் பதிவு...

முன்னாடி எல்லாம் பிரபல பதிவர்கள்தான் பெரிய பெரிய பத்திரிக்கைல இருந்து காப்பி பேஸ்ட் பண்ணுவாங்க. இப்போத்தான் எல்லாம் மாறிப்போச்சே. நேற்று வந்த பதிவரில் இருந்து பழம் தின்று கொட்டை போட்ட பதிவர்கள் வரை காப்பி பேஸ்ட் போடுகிறார்கள். பெரிய பத்திரிக்கைல இருந்து காப்பி பண்ணதெல்லாம் போயி எங்கே என்ன கிடைக்குதோ சத்தமில்லாம அள்ளிட்டு வந்து போட்டுடுறாங்க. அதுக்கு வர்ர கமெண்ட்டுகள பார்க்கனுமே, அதுக்கே தனிக்கட்டுரை எழுதனும். ஆஹா அருமையான பகிர்வு, நல்ல பகிர்வு, உபயோகமான பகிர்வு நண்பா, சூப்பர் பகிர்வு பாஸ்... கேட்கவே அருமையா இருக்கில்ல? (அடிக்க வராதீங்கண்ணே, நானும் கூட அந்த மாதிரி அப்பாவியா கமெண்ட் போட்டிருக்கேன்....)

சரி அபடியே இந்த ட்ரெண்டை பிக்கப் பண்ணி நாமலும் எதையாவது காப்பி பேஸ்ட் பண்ணலாம்னா எதுவுமே சிக்க மாட்டேங்கிது. ஏது ஏது இப்படியே போனா அப்புறம் காப்பி பேஸ்ட் பண்ணலைன்னு திரட்டிகள்ல இருந்து கூட ஒதுக்கி வெச்சிடுவாங்களோன்னு எல்லாரும் பயமுறுத்துறாங்க. அதுனால விடிய விடிய நின்னுக்கிட்டே யோசிச்சு யோசிச்சு ஒருவழியா முடிவு பண்ணிட்டேன். மனசை திடப்படுத்திக்குங்க. இனி நானும் காப்பி பேஸ்ட் பதிவு போடப்போறேன். எப்படியும் ஒரு காப்பி பேஸ்ட் பதிவு போட்டே ஆகறதுன்னு களத்துல இறங்கி உங்களுக்காக ஒரு அருமையான காப்பி பேஸ்ட்டை இங்கே போட்டிருக்கேன்.

பாருங்க, புடிக்கலேன்னா சொல்லுங்க, நாளைக்கு வேற காப்பி பேஸ்ட் போடுறேன்.....
.
.
.

.
.
..



காப்பி





பேஸ்ட்



என்ன சார் இந்த காப்பி, பேஸ்ட் ஓகேதானே? இத வெச்சிக்கிட்டு எப்படியாவது எனக்கும் ஒரு ரேங் வாங்கிக் கொடுத்துடுங்க சார். அத வெச்சி அண்ணா நகர்ல இல்லேன்னாலும் அமிஞ்சிக்கரைலயாவது ஒரு ஃப்ளாட் வாங்கிடனும்.

நன்றி:  காப்பி பேஸ்ட் பதிவர்கள், கூகிள் இமேஜஸ்...

Thursday, September 8, 2011

மங்காத்தா (இது விமர்சனம் அல்ல)

வருடத்திற்கு இரு முறை மட்டும் நிரம்பும் குளம் ஊருக்கு கிழக்கால் அமைந்திருந்தது. குளக்கரையில் கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்து சமூக விரோதிகளுக்கு இயற்கையான காவல்காரர்களாய் இருந்தன. குளத்தின் வடக்கு ஓரத்தில் சுண்ணாம்புக் காரையால் ஒரு திண்டு அமைக்கப்பட்டிருக்கும். அதில் எப்போதும் நாலைந்து பேர் வட்டமாய் அமர்ந்து சீட்டு விளையாடிக் கொண்டிருப்பர். தாத்தாவுடன் வயலுக்கு அவ்வழியே போகும்போது அவர்களைப் பார்த்திருக்கிறேன். அவர்களில் பாதிப் பேர் கூலித் தொழிலாளர்கள். மீதிப் பேர் எந்த வேலைக்கும் போகாமல் ஊர் சுற்றுபவர்கள், பொதுக் காரியங்களில் வம்பிழுப்பவர்கள்.

"அங்கே அவங்க எல்லாம் என்ன செஞ்சிட்டு இருக்காங்க தாத்தா?" என்றேன்.

"அவங்க எல்லாம் மூணு சீட்டு விளையாடறாங்க."

"வாங்க, நாமளும் போய் அவங்களோட விளையாடலாம்."

"அது எல்லாம் கெட்டவங்க செய்யிறது. நாம விளையாடக் கூடாது." என்றார்.

பாதியிலேயே மறைக்கப்பட்ட அந்த விளையாட்டு ஐந்தாம் வகுப்புப் படிக்கும் எனக்கு விளையாடிப் பார்க்கும் ஆர்வத்தைத் தூண்டியது. உடனே நான் என் நண்பன் கணேஷிடம் ஆலோசனை கேட்டேன். கணேஷ், குளக்கரையில் அவ்வப்போது சீட்டு விளையாடும் மணியின் மகன். கணேஷ் சில நேரம் அவன் அப்பாவுடன் சீட்டு விளையாடும் இடத்தில் இருந்திருக்கிறானாம். மதிய நேரம் யாருமே இருக்க  மாட்டாங்க, அப்போ போனா நாம ரெண்டுபேரும் விளையாடிப் பார்க்கலாம் என்றான். அவன் திட்டப்படியே இருவரும் அடுத்த நாள் மதியம் குளக்கரைக்கு போவதாய் முடிவெடுத்தோம்.




அடுத்த நாள் சனிக்கிழமை. இருவரும் மதியம் ஒரு மணிக்கு கிளம்பி குறுக்கு வழியில் குளக்கரைக்கு சென்று கொண்டிருந்தோம். போகும் வழியில் எங்கள் வகுப்புத் தோழன் ரமேஷ் பார்த்துவிட்டான். அவனையும் இழுத்துக் கொண்டு குளக்கரைக்குச் சென்றோம். திண்டுக்கு அருகில் ஒளித்து வைக்கப் பட்டிருந்த சீட்டுக் கட்டை வெளியில் எடுத்தான் கணேஷ். பூவைத் தடவுவது போல சீட்டுக்களை மென்மையாய்த் தடவிக் கொடுத்தான். எங்க அப்பா இப்படித்தான் ஒவ்வொரு சீட்டா எடுத்துப் போடுவார் டா என்றான். ரமேஷுக்கு சீட்டும் புதுசு, குளக்கரையும் புதுசு. அதனால் கொஞ்சம் படபடப்பாய் இருந்தான்.

இந்த சீட்டை வச்சு எப்படிடா விளையாடறது, இந்த விளையாட்டுக்குப் பேர் என்னடா என்றான் ரமேஷ்.

"மங்காத்தா டா" என்றான் கணேஷ்.

தோட்டத்திலிருந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்த என் ஆத்தா கையில் சாட்டையுடன் எங்களை நோக்கி வருவதைப் பார்த்ததும் பயத்தில் நான்,

"எங்காத்தா டா" என்றேன்.

சாட்டையுடன் ஆத்தா வருவதைப் பார்த்த ரமேஷ் பயத்தில்,

"உங்காத்தா டா" என்றான்.

டிஸ்கி: இங்கே மங்காத்தா விமர்சனம் தேடி வந்தவர்களுக்கு, ஏற்கனவே தலைப்பில் சொல்லியபடி, இது விமர்சனம் அல்ல.

Tuesday, August 9, 2011

மூன்று!

பதிவுலகில் அனைவரும் மூன்று என்று மூன்றைப் பற்றி எழுதிவிட்டார்கள். என்னையும் எழுத அன்போட அழைத்த வெறும்பய ஜெயந்த் அவர்களுக்கு நன்றி சொல்லி என்னைப் பாதித்த/எனக்குப் பிடித்த மூன்றுகள் பற்றி இங்கே சிறப்புரை மன்னிக்கவும், எழுதப் போகிறேன்.


1. விரும்பும் 3 விஷயங்கள்
அ.  தமிழ் இலக்கியங்கள் படிக்க
ஆ. என்னுடைய தண்டர்பேர்டில் நாள்கணக்காய் ஊர் சுற்ற
இ.  இரயில் பயணத்தில் நிலா


2. விரும்பாத 3 விஷயங்கள்
அ. தூங்கும்போது எழுப்புவது
ஆ.பொய் பேசுபவர்கள்
இ. லஞ்சம் வாங்கும் அதிகாரிகள்


3. பயப்படும் 3 விஷயங்கள்
அ. இயற்கை
ஆ. டாகுடர்/பெரிய டாகுடர் படங்கள் பார்க்க
இ. அறிவாளி போல் நடிப்பவர்கள்


4. புரியாத 3 விஷயங்கள்
அ. தோழி
ஆ. திரும்பவும் அதே இயற்கை
இ.  பிரபஞ்சம்


5. உங்கள் மேஜையில் இருக்கும் 3 பொருட்கள்
அ. மடிக்கணினி
ஆ. அலைபேசி
இ. என்னுடைய பழைய ஹீரோ பேனா


6. உங்களை சிரிக்க வைக்கும் 3 விஷயங்கள்
அ.  செய்திகள் எந்த டிவி சேனலிலும்
ஆ. என் டேமேஜர்கள்
இ. கடவுள் இல்லை என சொல்லுபவர்கள் செய்யும் கூத்து


7. இப்பொழுது செய்து கொண்டிருக்கும் 3 காரியங்கள்
அ. விட்டத்தைப் பார்க்கிறேன்
ஆ. யோசிக்கிறேன்
இ. யோ...........சிக்கிறேன்


8. வாழ்நாள் முடிவதற்குள் செய்ய நினைக்கும் 3 காரியங்கள்
அ. எம் எல் ஏ ஆகுவது
ஆ. ஒரு முறையாவது இமயமலை போய் வரணும்
இ. துறவறம்


9. உங்களால் செய்து முடிக்க கூடிய 3 விஷயங்கள்
அ. தூங்குதல்
ஆ. சாப்பிடுதல்
இ.  பிளாக்/பஸ்/ட்வீட் படித்தல்


10. கற்றுக்கொள்ள விரும்பும் 3 விஷயங்கள்
அ. எல்லா மொழிகளையும் (தமிழும்)
ஆ. ஏரோப் பிளான் ஓட்ட
இ. கப்பலில் பயணம் செய்ய


11. பிடித்த 3 உணவு விஷயங்கள்
அ. சாம்பார்
ஆ. தோசை
இ. பலா


12. கேட்க விரும்பாத 3 விஷயங்கள்
அ. டாகுடர் முதலமைச்சர் ஆவதாக சொல்வது
ஆ. தண்ணியடித்து விட்டு புலம்பும் மக்களின் வார்த்தைகள்
இ. என்னை அறிவாளி என்று சொல்வதை


13. அடிக்கடி முணுமுணுக்கும் 3 பாடல்கள்
அ. அன்பே அன்பே கொல்லாதே
ஆ. காதலின் தீபம் ஒன்று
இ. ராத்திரிக்கு கொஞ்சம் ஊத்திக்கிறேன்


14. பிடித்த 3 படங்கள்
அ. சுறா
ஆ. ஆதி
இ. நரசிம்மா


15. இது இல்லாம வாழ முடியாதுன்னு சொல்ற 3 விஷயம்
அ. என்னோட இதயம்
ஆ. இயற்கை
இ.  காற்று


16. இதை எழுத அழைக்கப்போகும் நபர் 3 பேர்
அ. தமிழில் பதிவு எழுதுபவர்கள்
ஆ. தமிழில் பஸ் விடுபவர்கள்
இ. தமிழில் ட்வீட்டுபவர்கள்

Monday, July 18, 2011

காதல் வாகனம்

 பள்ளி முடித்து கல்லூரியில் செல்ல தொடங்கியிருந்த நேரம். நானும் நண்பன் சாமியும் சரக்கு அடிக்கும்போது கூட சண்டை போடாத அளவுக்கு இணைபிரியா நண்பர்கள். நான் என்ஜினீரிங் காலேஜில் சேர்ந்திருந்தேன். நண்பன் ஈரோட்டுக்குப் பக்கத்தில் உள்ள பாரதிதாசன் ஆர்ட்ஸ் காலேஜுக்கு போய் வந்தான். அப்போது அவனுக்கு காலேஜ் ஆரம்பிச்சு ஒரு மாதம் இருக்கும். எனக்கு அப்போது காலேஜ் ஆரம்பிக்கவில்லை. தினமும் காலையில் எட்டு மணிக்கு கோபிக்கு போகும் ஒரு பிரைவேட் டவுன் பஸ்சில் தான் காலேஜ் போவான். அப்படி போகும் போது ஒரு நாள் அந்த பஸ்சில் இருக்கும் ஒரு பொண்ணு அவனைப் பார்த்து சிரித்திருக்கிறாள். அன்றிரவே ட்ரீட் கொடுத்தான் நண்பன். நானும் மற்ற இரண்டு நண்பர்களும் மாப்ளே நீ அழகாத் தானே இருக்கே, டிரை பன்றா என ஏத்தி விட்டோம். பங்காளி நாளைக்கு நீ நாகாவோட பைக்கை எடுத்திட்டு போய் கொஞ்சமா சீன் போடுறா என்றார் மணி. மணி, இவர் நம்ம சாமிக்கு பங்காளி. எங்களுக்கு அண்ணன் மாதிரி.



எனக்கு அப்போது தான் என் அப்பாவுடைய யமஹா RX100 அவரிடமிருந்து கிடைத்திருந்தது. அது 1987 வருஷத்த பழைய யமஹா. ஆனால் அப்பாவே ஓட்டியதால் பார்க்கிறதுக்கு கொஞ்சம் நல்லா இருந்தது. அடுத்த நாள் காலையில் சாமி என்னோட பைக்கை எடுத்திட்டு போனான். பஸ் ஸ்டாப்ல பஸ் நின்னா அவனும் நிப்பான். பஸ் போனா அவனும் பஸ் பின்னாடி இல்லனா முன்னாடி போவான். இப்படியே கோபி வரைக்கும் போனான். கச்சேரிமேடு பஸ் ஸ்டாப்ல அந்த பொண்ணு இறங்கி பழனியம்மாள் ஸ்கூலுக்கு போனாள். இவனும் அந்த ஸ்கூல் கேட் வரைக்கும் அவ பின்னாலேயே போயிட்டு, பைக்கை பஸ் ஸ்டாண்ட் பக்கத்துல இருக்கிற எங்க நண்பனோட பிரவ்சிங் சென்டர்ல நிறுத்திட்டு காலேஜ் பஸ்ல காலேஜ் போயிட்டான். அப்புறம் ஈவ்னிங் பஸ் ஸ்டாண்டுல அந்த பொண்ணு பஸ் ஏறுகிற வரை சைட்டடிப்பான். அதற்கு அப்புறம் அந்த பஸ்ஸை ஃபாலோ பண்ணுவான்.


இப்படியே ஒரு வாரம் ஓடிடுச்சு. அந்தப் பொண்ணும் இவனைப் பார்த்து சிரிச்சு பேசுற அளவுக்கு முன்னேறிட்டான். அந்த வார சனிக்கிழமை நான் அவனிடம் மாப்ளே அடுத்த வாரத்துல இருந்து எனக்கு காலேஜ் ஸ்டார்ட் ஆகிடும்டான்னு சொன்னேன். அதற்கு சாமி அப்போ நானும் ஒரு யமஹா RX வாங்கிடுறேண்டான்னு சொன்னான். அன்னைக்கே பைக் வாங்கிறதுன்னு முடிவு பண்ணிட்டு களத்துல இறங்கினோம். 86 இல்லனா 87 வருஷத்த வண்டி வாங்கலாம் (அதில் தான் ஜப்பான் இன்ஜின், ஜப்பான் கார்பரேட்டர் இருக்கும்) என முடிவு செய்தோம். நம்ம மணி அண்ணன் அவரோட நண்பர்களுக்கெல்லாம் போன் போட்டு கேட்டார். நானும் சாமியும் சத்தியமங்கலத்தில் ஆரம்பித்து மேட்டுப் பாளையம், புளியம்பட்டி, நம்பியூர் இப்படி ஒரு ரவுண்டு வந்தோம். ஒண்ணும் தேறல. மச்சி நான் திங்கள் லீவு போடுறேன். நாம ரெண்டு பேரும் கோபி, ஈரோடு போய் பார்க்கலாண்டா என்றான் சாமி.

திங்கள் வழக்கம் போல பஸ்ஸை ஃபாலோ பண்ணி கோபி போனோம். அங்கே சாமியின் கல்லூரி நண்பன் ஒருவன் அந்தியூரில் ஒரு 87 வருஷத்த வண்டி இருப்பதாய் சொன்னான். அப்படியே அந்தியூர் போனோம். அந்த வண்டி ஒரு பெரியவரிடம் இருந்தது. அவர் உங்களை மாதிரி இளவட்ட பசங்களுக்கு நான் இந்த வண்டியை தரமுடியாதுன்னு சொல்லிட்டார். அப்புறம்  ஒரு வழியா பேசி முடிச்சு வண்டியை வாங்கிட்டு கோபி சாயந்திரம் வந்து சேர்ந்தோம். நம்ம சாமி பஸ் ஸ்டாண்டுல அவனோட வண்டில ஒரு அரை மணி நேரம் சீன் போட்டான். அப்புறம் வழக்கம் போல பஸ்ஸை ஃபாலோ பண்ணி எங்க ஊருக்கு வந்தோம். வந்த உடனே நம்ம மெக்கானிக்கிட்டே சொல்லி சைலன்சர் ஆல்டர் பண்ணினான்.


அடுத்த நாள் வழக்கம் போல பஸ்ஸை ஃபாலோ பண்ணிப் போய் கச்சேரிமேட்டுல அந்தப் பொண்ணுகிட்டே பேசி இருக்கான். நான் இந்த வண்டியை வாங்கிட்டேன், வா உன்னை ஸ்கூல்ல டிராப் பண்றேன்னு சொல்லிருக்கான். அதற்கு அந்தப் பொண்ணு இது நாகாவோட வண்டி தானே? அவரு வரலையா? அவங்கள கேட்டதா சொல்லுங்க அண்ணேன்னு சொல்லிட்டு ஓடிடுச்சு. அன்னைக்கு நைட்டுத் தான் பீரையும் பிராந்தியையும் மிக்ஸ் பண்ணி அடிச்சா போதை தலைக்கேறும்னு தெரிஞ்சுகிட்டோம்.

--தொடரும்