நாள் : 31st July 2005
நான் தனியாகத்தான் உள்ளேன் உருவத்தால். ஆனால் உள்ளத்தால் எந்நேரமும் உன்னுடனே தான் உள்ளேன். என்ன செய்ய? பார்த்துப் பல நாட்கள் ஆகிவிட்டது. நாட்கள் வாரங்களாய், வாரங்கள் மாதங்களாய் ஆகி இப்போது வருடங்களாய் உருண்டோடிவிட்டது.
பார்க்கவே நேரமில்லை உனக்கு. பின் எப்படி என்னை நினைத்துக் கொண்டிருப்பாய்? உனக்காய் யுகம்யுகமாய்க் காத்திருப்பேன், உன்காலடி நிழலையும் தாங்குவேன் என பொய் வார்த்தைகள் நான் சொல்லவில்லை. நான் உன் நினைவிலேயே இருந்து அழிந்து போகிறேன் என்றுதான் சொல்கிறேன்.
மாதத்தில் ஒரு நாளாவது நீ என்னைப் பற்றி நினைப்பாய் என எண்ணுகிறேன். அன்றாடம் வேறு பெண்களைப் பார்க்கும் போது எனக்கு அவர்கள் முகம் மறந்து உன் முகமே அதில் தெரிகிறது.
" எனக்கே பயமாய் உள்ளது. எங்கே நான் அவர்களை நீ என நினைத்துப் பேசிவிடுவேனோ என்று ?"
என்னை நினைப்பாய் தானே??
நாள் : 19th September 2007
இந்த இரண்டு வருடங்களில் அனைத்தும் மாறிவிட்டது. அன்று பார்த்துப் பேசி பல வருடங்களாகி விட்டது என்று எழுதியிருந்தேன். ஆனால் இன்று தினமும் பேசுகிறேன் - காதலாய் அல்ல வெறும் நட்பு மட்டும் தான்.
என் காதல் நட்பாய் மாறியதா இல்லை அவள் நட்பு 'நட்பாய்' தொடர்கிறதா என என்னால் அறியமுடியவில்லை. அவளிடமும் காதல் இருந்தது என்று நினைத்திருந்தேன். நான் ஏன் இப்படி மாறினேன் என்று எனக்கே தெரியவில்லை. என் கையெழுத்திலிருந்து செயல்கள் வரை அனைத்தும் மாறிவிட்டது.
தினமும் பேசியதால் தான் அவளைப் பற்றி புரிந்து கொள்ள முடிந்தது. அதனால் தான் நான் நண்பனாய் மட்டும் இருக்க விரும்பினேன், விரும்புகிறேன்.
ஆனால் அவளுடைய மனது என்ன நினைக்கிறது என்று மட்டும் என்னால் அறியமுடியவில்லை. இருந்தும் இனி நான் நண்பனாய் மட்டும் தொடர்வேன் என்று உறுதியாய் நம்புகிறேன்.
டிஸ்கி: இது என்னோட சொந்த டைரிக் குறிப்பு
டிஸ்கி: இது என்னோட சொந்த டைரிக் குறிப்பு