குறிப்பு

என் வலைப்பூவிற்கு லோகோ அமைத்துக் கொடுத்த எஸ்கே(S.K) அவர்களுக்கு நன்றி.

Friday, January 24, 2014

புத்தகக் கண்காட்சியும் சமகால எழுத்தாளர்களும்!

என்னோட ஆகச் சிறந்த ஆக்கமான "கந்தரகோலம்" வருவதற்கு முன் இன்னொரு பொஸ்தவம் போடலாம் என இருக்கிறேன். புத்தகக் கண்காட்சி முன்னிட்டு இந்த வளரும்/இளம்/சின்ன/புதிய/பழைய/பெரிய எழுத்தாளர்கள் படும் கஷ்டத்தைப் பார்த்தே இந்த முடிவு எடுத்துள்ளேன்.

அது என்னான்னா,
எழுத்தாளர் ஆவது எப்படி?
முப்பது நாளில் நீங்களும் எழுத்தாளரே!
இலக்கணப் பிழைகளைத் தவிர்ப்பது எப்படி?
துக்கம் தொண்டையை அடைப்பதை களைவது எப்படி?
அடுத்த வருடம் நீங்களும் இலக்கியவாதியே!
இலக்கிய நோபல் பரிசும்,புலிட்சர் பரிசும் உங்களுக்கே!
இந்தப் புக்கை எழுதாதீர்கள்!
எழுத்தாளருக்கு தன்னம்பிக்கை தரும் ஆயிரம் பொன்மொழிகள்
நீயும் என்னைப் போன்ற எழுத்தாளனே - மோனிகா லெவின்ஸ்கீயின் மொழிபெயர்ப்பு கட்டுரைகள்

அடுத்து,

பதிப்பகம் ஆரம்பிக்க ஆயிரம் ஐடியாக்கள்
பதிப்பாளாராவது எப்படி?
பதிப்பகம் - அலசல்கள்
நூலக ஆர்டர்கள் பெறுவது எப்படி?
பதிப்பாளரும் ராயல்டி பிரச்சினைகளும்
எழுத்தாளருடன் ராயல்டி போடுவது எப்படி?
பதிப்பக ஆடிட்டிங்
முப்பது நாளில் பிரிண்டிங் கற்பது எப்படி?




நாவலோ, கட்டுரையோ, கவிதையோ அல்லது சிறுகதையோ எழுதுவது அவ்வளவு கஷ்டமில்லை. எப்படி எழுத வேண்டும் என்பதை ஏற்கனவே நிறையப் பேர் சொல்லிவிட்டபடியால், இப்போதைய எழுத்தாளர்கள் முன்னுரை மற்றும் சமர்ப்பணம் போன்ற முக்கிய பகுதிகளை எழுதுவதில் கோட்டை விடுகின்றனர். எனவே

முப்பது நாளில் முன்னுரை எழுதுவது எப்படி?
உங்கள் நூலை சமர்ப்பணம் செய்வது எப்படி?
பின்னட்டைக்கு போஸ் கொடுப்பது எப்படி?

இருக்கும் கொஞ்ச நஞ்ச வாசகர்களும் இந்தப் புத்தகங்களை வாங்கி அடுத்த வருடத்திற்குள் நீங்களும் ஒரு புத்தகமோ, பதிப்பகமோ ஆரம்பித்து சமகால இலக்கியவாதிகளுக்கு போட்டியாய் படைப்பை உருவாக்க வேண்டும் என விரும்புகிறேன்.