குறிப்பு

என் வலைப்பூவிற்கு லோகோ அமைத்துக் கொடுத்த எஸ்கே(S.K) அவர்களுக்கு நன்றி.

Wednesday, October 16, 2013

ஓர் இலக்கியவாதியின் பாஸ்வேர்ட் கதை

முன்னெல்லாம் அலமாரி, பீரோ இதற்கு ஒரு பூட்டுக்கு ரெண்டு பூட்டா போடுவாங்க. அதற்கு முன்னே மண்ணுக்குள்ளே புதைச்சு வச்சிருந்தாங்க. அப்புறம் நம்பர் லாக்கிங் சிஸ்டம் வந்தது. இது எல்லாமே நம்மோட பொருளையோ, இன்னபிறவற்றையோ மற்றவர்கள் திருடக்கூடாது என்பதற்காகத்தான்.

இப்போ எல்லாமே கம்ப்யூட்டர், ஆன்லைன்னு ஆனதற்குப் பின் பாஸ்வேர்ட் அமைப்பது தான் மிகப்பெரிய கஷ்டமான வேலை. நீங்க எவ்வளவு தான் ஐடில பெரிய அப்பாடக்கரா இருந்தாலும் சரியான பாஸ்வேர்ட் வைக்காமல் விட்டுட்டீங்கன்னா உங்க பணம், இமேஜ், வேலை இப்படி எல்லாமே கோவிந்தா ஆகிடும்.

பாஸ்வேர்ட் வைக்கிறது ஒரு காலத்துல சாதரணமாகத்தான் இருந்தது. ஹேக்கிங் அதிகமானதற்கு அப்புறம் அதில் பல வகையான மாற்றங்கள் கொண்டு வந்தாங்க. ஸ்பெஷல் கேரக்டர் வைங்க, கேப்பிடல் லட்டர் வைங்க, நம்பர்கள் கண்டிப்பா இருக்கணும் இப்படி.



ஆன்லைன் பேங்க்கிங், டிரான்ஸாக்சன் அதிகமானதிற்கு அப்புறம் ஒவ்வொரு சைட்லையும் நம்ம பேரை ரெஜிஸ்டர் பண்ணிட்டு வித்தியாசமான பாஸ்வேர்ட் வைக்க வேண்டியதாகிடுச்சி. ஒரே பாஸ்வேர்ட் வைக்கிறதுல ரெண்டு பிரச்சினைகள்.

ஒண்ணு, யாராவது நம்ம பாஸ்வேர்ட் கண்டுபிடிசிட்டா அப்புறம் ஈஸியா எல்லாத்தையும் சுருட்டிடலாம்.

ரெண்டாவது, பாஸ்வேர்ட் சிஸ்டம் ஒவ்வொரு சைட்டும் ஒவ்வொரு மாதிரி வச்சிருக்காங்க.

இப்போ லாகின் வித் பேஸ்புக், கூகிள் ஆப்ஷன்ஸ் வர ஆரம்பிச்சிருக்கு. ஆனாலும் இதை பேங்க் அக்கவுண்டுக்கு பயன்படுத்த முடியாது.

என்ன ஆச்சின்னா, பாஸ்வேர்ட் எல்லாம் மறந்து போயிருதுன்னு சொல்லி எல்லாம் பாஸ்வேர்ட்களையும் ஒரு எக்ஸெல் ஷீட்ல போட்டு அதற்கு ஒரு பாஸ்வேர்ட் போட்டு வச்சிருந்தேன்.

இப்போ அந்த எக்ஸெல் ஷீட் பாஸ்வேர்ட்டை மறந்திட்டேன்..

2 comments:

காட்டான் said...

ம்.. எல்லா இடமும் ஒரே கதைதான்..!! :)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

சார், இலக்கியவாதின்னு சொல்லி இருக்கீங்களே அது யாரு சார்?